JustPaste.it

இன்று பலர் மீத்தேன் எடுப்பது பற்றி பொங்கி எழுகின்றனர்.

ஆனால்...இந்த மீத்தேன் பற்றி இந்தியாவிலும், உலகளாவிய அளவில் மிகச்சிறந்த Geologist...விஞ்ஞானி...(நமது அரங்கனின் மிகச்சிறந்த பக்தர்) திரு ராம்குமார் சொல்வதை கேளுங்கள்..

ஸ்ரீரங்கம் மணவாளமாமுனிகள், ஆதிகேசப்பெருமாள் கோவிலை கண்டெடுத்தவர்....இவரே....

முதலில் அவரது இந்த துறை சார்ந்த தகுதிகளை எழுதி இருக்கிறார்....

பாகம்: -1

===========>>>>>>>>>>>>>>>

Actually what's the issue? மோடியா ? உற்பத்தித் துறையில் இந்தியா தன்னிறைவு பெறுவதா? தேச நலனா? விவசாயமா ?

தனது சக்தியை உணர்ந்து கொண்ட Tech Savvy இளைய சமுதாயத்தை ஏதாவது உணர்வுப்பூர்வமாக வளைத்துப் போட அரசியலாளர் செய்யும் முயற்சியா? நானும் விளையாட்டிலிருக்கிறேன் என்று தன்னை, தமது அமைப்பை முன்னிருத்த கிடைத்த சந்தர்ப்பமாக தொண்டு நிறுவனங்கள் முயல்கின்றனவா? அல்லது பிரச்சனை ஹைட்ரோ கார்பனா?

ஹைட்ரோ கார்பன் என்றால் இந்தியாவில் ஹைட்ரோ கார்பன் எடுப்பது பிரச்சனையா? தமிழகத்தில் எடுப்பது பிரச்சனையா? காவிரி டெல்டாவில் எடுப்பது பிரச்சனையா?

நெடுவாசலில் எடுப்பது பிரச்சனையா? கடந்த சில நாட்களாக ஜியாலஜிஸ்டை தவிர அனைவரும் பேசும் பொருளாக உள்ளது குறித்து எனது கருத்து.

எச்சரிக்கை 1: மோடி தான் உங்கள் பிரச்சனை என்றால், ....... எனது பதில் ... மோடி ஒழிக. 2037 க்கு பிறகு ஒழிக.

எச்சரிக்கை 2: எனது கருத்துக்கு மாற்று அல்லது எதிர் கருத்து இருப்பின் கீழ் கண்ட தகுதிகளுக்கு மேல் தமக்கு இருப்பதாக நிரூபித்தோர் தமது கருத்தை - அறிவியல் கருத்தை பதிவு செய்யலாம்.

நான் இந்தியன், தமிழன், சுற்றுசூழல் விரும்பி, விவசாயிகளின் நண்பன் என்று கருத்து + அரசியல் சித்து விளையாட விரும்புவோர், எனது FB திண்ணையை விட்டு விட்டு வேறெங்காவது சென்று விளையாடவும்.

  1. மத்திய அரசின் Directorate of hydrocarbon முதன் முதலாக இந்தியாவிலுள்ள வடிநிலங்களைப் பற்றியும், அவற்றில் ஹைட்ரோ கார்பன் கிடைப்பது, கிடைக்கும் ஹைட்ரோ கார்பன் ஐ இலகுவாக மேலெடுப்பது, அவ்வாறு எடுக்கும் போது நிகழ கூடிய ஆபத்துக்கள் எவை, அவற்றை தடுக்கும் விதங்கள் பற்றிய ஆய்வுகள் நடத்தவும், ஆய்வுகள் நடத்த நிபுணர்களை உருவாக்கவும் Delta Studies Institute என்ற பெயரில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ஒரு புதிய ஆய்வு நிறுவனத்தை நிறுவியது. அந்த ஆய்வு, கல்வி நிறுவனத்தை உருவாக்கி, பல ஆய்வுகளை முன்னெடுத்து, மற்றும் பல பணிகளை செய்தது Dr.Mu.Ramkumar என்ற Founder Scientist.
  2. Hydrocarbon exploration ல் புதிய தொழில்நுட்பமான chemostratigraphy என்ற பிரிவை உலகறியச் செய்யும் விதமாக அறிவியல் உலகின் No.1 பதிப்பாளரான Elsevier மூலம் அத் தொழில்நுட்ப சட்ட திட்டங்களை நிறுவியது Dr.Mu.Ramkumar.
  3. இப்பிரிவை உலகறியச் செய்யும் விதமாக ஆய்வு நடத்துவதற்காக செருமனி ஜனாதிபதியின் நேரடி நிர்வாகத்திலிருக்கும் Alexander von Humboldt Foundation மூலம் visiting scientist ஆக தொடர்ந்து மூன்றாண்டுகள் இந்தியாவிலிருந்து அழைக்கப்பட்டது Dr.Mu.Ramkumar.
  4. Petroleum exploration fieldல் உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றான மலேசியாவிலுள்ள Universiti Teknologi Petronas ல் ஹைட்ரோகார்பன் ஆய்வுக்கு Visiting Scientist ஆக இந்தியாவிலிருந்து அழைக்கப்பட்டது Dr.Mu.Ramkumar. மேலும் மலேசிய அரசு எமது ஆய்வுக் குழுவுக்கு 3.3 மில்லியன் ஈரோ அதாவது சுமார் 24 கோடி ௹பாய் கொடுத்துள்ளது.
  5. பொதுமக்களுக்கு Face book போல ஆய்வாளர்களுக்கு Research gate என்ற வலைத்தளம் உள்ளது. அதில் விஞ்ஞானிகளின் ஆய்வறிவு, ஆய்வுக் கட்டுரைகளின் பயன்பாடு போன்றவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு பயனீட்டாளருக்கும் தரவரிசை ஸ்கோர் தரப்படும். Dr.Mu.Ramkumar ன் தற்போதய ஸ்கோர் 30.89 அதாவது அவ்வலைத்தளத்தில் உறுப்பினராயுள்ள பல லட்சக்கணக்கானோரில் Top 12.5% ல் Dr.Mu.Ramkumar ன் ஆய்வுத் தரம் உள்ளது.

So, ஹைட்ரோ கார்பன் துரப்பண ஆய்வு குறித்து மேற்கண்டவற்றிற்கு மேலதிகமாக சாதித்தோர் மட்டும் எனது அறிவியற்கருத்துகளுக்கு பதிலிறுக்கலாம். கருத்துக்கள் இப்பதிவின் ஆரம்பத்தில் குறிப்பிட்டுள்ள படி ஒவ்வொரு கேள்விக்குமான பதில்களாக பதிவேற்றப்படும்.

First thing is first:

உற்பத்தித் துறையில் இந்தியா தன்னிறைவு பெறுவதா? தேச நலனா?

இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு வரை கிட்டதட்ட 80% வரை இந்தியாவின் ஹைட்ரோ கார்பன் தேவை இறக்குமதி மூலமே நிறைவேற்றப்பட்டு வந்தது. நமது foreign exchange reserve ம் oil import bill Servicing –க்காகவே பெருமளவில் உபயோகப்பட்டு வந்தது. Uல்வேறு நடவடிக்கைகள் மூலம் இந்த dependency குறைக்கப்பட்டு வந்துள்ளது.

உதாரணமாக, Oil Videsh Ltd என்ற நிறுவனம் மூலம் பிற நாடுகளில் நாமே எண்ணை வயல்களை நிறுவி, நமது இந்தியதேவைகளுக்கு பயன்படுத்துவது, இந்தியாவின் Unexplored பகுதிகளை ஆய்வுக்குட்படுத்துவது, ஹைட்ரோ கார்பன் இருக்கலாம் என ஊகிக்கப் பட்டுள்ள ஆழ்கடல் மற்றும் நிலப்பகுதிகளில் தீவிர துரப்பண பணிகளை முடுக்கி விடுவது, joint venture மூலம் மேம்பட்ட தொழில் நுட்பங்களை அயல் நாட்டு நிறுவனங்களை இந்திய பகுதியில் ஆய்வு நடத்த செய்தல், ஏற்கனவே ஹைட்ரோ கார்பன் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உற்பத்தியை துவக்குவது, உற்பத்தி நடைபெறும் கிணறுகளில் recovery rate - ஐ அதிகப்படுத்துவது, சிறிய எண்ணைவயல்களிலிருந்து உற்பத்தியை ஆரம்பிப்பது போன்ற நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.

இவற்றால் நன்மைகளே அதிகம்.

Strategic ஆகவும் எண்ணை உற்பத்தியில் தன்னிறைவுக்கு இந்நடவடிக்கைகள் அவசியமானவை.

Foreign exchange reserve - ஐ பாதுகாக்கவும் உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கப்பட வேண்டும்.

நம்ம கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு அதாவது நம்நாட்டிலுள்ள ஹைட்ரோ கார்பனை விட்டு விட்டு வெளிநாட்டிடம் கையேந்துவது கேவலம்.

நமது பொருளாதார, சமூக முன்னேற்றம் எரிபொருள் உற்பத்தி தன்னிறைவை சார்ந்துள்ளது.

கூடாது, மாட்டேன், செல்லாது என்பவரெல்லாம் நாளையிலிருந்து விறகடுப்பில் சமைக்கட்டும்; சமையல் கேஸ் கனெக்சனை வேண்டாமென்று திருப்பி கொடுக்கட்டும்; பைக், கார், பஸ், இரயில், விமான போக்குவரத்தை பயன்படுத்தாமல் காளை மாட்டு வண்டியில் பயணம் செய்யட்டும்.

மற்றொரு முக்கிய செய்தி: டீசல், பெட்ரோல், மண் எண்ணை மட்டுமல்ல, தார் ரோட்டிற்கு asphalt, நூற்றுக்கணக்கான மருந்து பொருட்கள், solvents, fertilizer ஆகியனவும் Crude oil ஐ சுத்திகரிக்கும் போது கிடைக்கின்றன. ஹைட்ரோகார்பன் வேண்டாமென்பவர்கள் அவற்றையும் வேண்டாமென மறுதலிக்கட்டும். மொதல்ல எங்க ஊரில் ரோடு வசதி வேண்டாமின்னு சொல்லட்டும் பாக்கலாம்.

Mu.Ramkumar

------------

மீதேன் எடுப்பது நல்லதா ? - பாகம் - 2

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்தில் ... ஹைட்ரோ கார்பன் எடுக்க கூடாது என்றும் எவரும் தற்சூழ்நிலையில் சொல்லவில்லை.

ஆந்திராவிலோ அஸ்ஸாமிலோ, காம்பே பகுதியிலோ பல தசாப்தங்களாக எடுப்பதை பற்றி ஏதும் சொல்லவில்லை. அப்படியென்றால் அண்டை மாநிலமோ அண்டை மாவட்டமோ எங்கு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளட்டும், எங்கள் மாநிலத்தில், மாவட்டத்தில், பகுதியில் எடுக்க கூடாது;

ஆனால் கேஸ் கனக்சன் வேணும், அதுவும் சலுகை விலையில், போன் மூலம் பதிவு செய்தவுடன் ரெட்டை சிலிண்டர் வேணும், மருந்து மாத்திரை வேணும், மேடு பள்ளமில்லாத ரோடு வேணும், என்று சொன்னால், கேட்டால் அது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.

நமது இந்திய சட்டங்களின்படி கனிம வளங்கள் இரண்டு அட்டவணையில் உள்ளன. அதில் சிறு கனிமங்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டிலும் மற்றவை மைய அரசு கட்டுப்பாட்டிலும் உள்ளன.

எங்கு, எத்தகைய கனிமங்கள் கிடைத்தாலும் துரப்பண பணிகளுக்கு, கனிம உற்பத்திக்கு மைய, மாநில அரசுகளின் அனுமதி தேவை.

மாநில அரசின் கட்டுப்பாட்டிலுள்ள நிலத்தில் மைய அரசின் அட்டவணையிலுள்ள கனிமத்தை அகழ்ந்தெடுப்பதானால் மைய அரசு தக்க EIA அறிக்கை, Local governing body அனுமதி ஆகியவற்றை பெற்ற பின்னரே நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

பின்னர் உற்பத்தி செய்யப்படும் கனிம அளவு, மதிப்பு ஆகியவற்றினடிப்படையில் மாநில அரசு, local governing body ஆகியவற்றுக்கு royalty கொடுக்கும். இது அத்தகைய உற்பத்தி மையங்களருகில் உண்டாகும் Infrastructure, வேலை வாய்ப்பு, developmental activities ஆகியவற்றுக்கு மேலாக மாநில, உள்ளாட்சி அமைப்புகளுக்கு கிடைக்கும் நிதியாதாரம்.

அனைத்துக்கும் மேலாக தமது மதிப்பீட்டின் அடிப்படையில் for the benefit of common good என்று முடிவு செய்து இத்தகைய கனிமங்கள் கிடைக்கும் இடங்களை குத்தகைக்கோ அல்லது கையகபடுத்தவோ அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது. உதாரணமாக தங்கநாற்கர சாலை அமைக்க நிலங்கள் அரசால் கையகபடுத்தியதை குறிப்பிடலாம். நீதிமன்றம் சென்று போராடலாம்; ஆனால் for the benefit of common good என்று நீதிமன்றம் ஏற்று கொள்ளும் பட்சத்தில் அரசின் முடிவை மாற்றயியலாது,

அடுத்ததாக, கேஸ் கனக்சன் முதல் துபாய் ரோடு மாதிரி அனைத்தும் வேண்டும், ஆனால் எங்கள் மாநிலம், மாவட்டம், கிராமம், நிலத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கக் கூடாதென்ற option -ஐ பற்றி பார்க்கலாம்.

புவியியற் கூற்றுகளின் படி இந்தியா ஒரு தனித்துவமான கண்டம் (Continent). இந்தியாவில் உலகில் காணப்படும் கிட்டதட்ட அனைத்து வகை பாறைகள், கனிமங்கள் ஆகியன உள்ளன. பல கோடி ஆண்டுகளுக்கு முன் உருவான யுரேனிய தாதுவிலிருந்து, இரும்பு, தங்கம், செம்பு கனிம வகையிலிருந்து நேற்று உருவான பாறைக் குழம்பு, thorium, இல்மனைட் beach placer வரை அனைத்தும் உள்ளன.

இவையனைத்தும் வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு பாறை வகைகளாக, வெவ்வேறு ஆழங்களில் கிடைக்கின்றன. உதாரணமாக ஆற்று மணல் தரைமட்டத்திலேயும், தங்கம் பல நூறு மீட்டர் அல்லது பல கி.மீ ஆழத்திலும் கிடைக்கின்றன. உருவாகும் விதம், இடம், தன்மை ஆகியவற்றை பொறுத்து இக்கனிமங்கள் மிகக் கடினமான நீர் புகாபாறை வகைளிலிருந்து நீருடன் இணைந்திருக்கும் பாறைகள், நீரை கடத்தும் பாறைகள் ஆகியவற்றில் பொதிந்துள்ளன. இதற்கெல்லாம் பல கோடி கணக்கான ஆண்டுகளாக கல்தோன்றி மண் தோன்றாகாலத்தே முன் தோன்றிய மூத்த குடிகளாே, &&&"மோடியோ"&&&& ஏதும் செய்யாமல் இயற்கையாக நிகழ்ந்த புவியியற்காரணிகளே காரணம்.

மனிதனின் தேவைக்கு, வளர்ச்சிக்கு, எதிர்கால முன்னேற்றத்திற்கு இயற்கை வளங்களே அடிப்படை. இயற்கை வளங்கள் புவியில் சம நிலையில் கிடைப்பதில்லை. கிடைக்கும் இடத்திலிருந்து தான் தேவைக்கு, வளர்ச்சிக்கு, முன்னேற்றத்திற்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எளிதில் புரிகிற மாதிரி சொல்வதென்றால் கனிமங்கள் எவ்விடத்தில், எந்த பாறையில் எந்த ஆழத்தில் கிடைக்கிறனவோ அங்கு தான் எடுக்க முடியும் -

அடுத்து ஹைட்ரோ கார்பன் -க்கு வருவோம்.

இவை படிவுப் பாறைகளிலேயே கிடைக்கின்றன.

பாறை அடுக்குகளுக்கு இடையேயும், பாறை வெடிப்புகளுக்குள்ளும், பாறைகளின் உள்ளேயுள்ள இடுக்குகளிலும் சேகரமாகி பல லட்சகணக்கான ஆண்டுகளாக அப்படியே உள்ளன.

எண்ணெய்,

எண்ணெய் + கேஸ்,

கேஸ்,

எண்ணெய் + நீர் + கேஸ்,

உறைபனிநீர் + உறைந்த கேஸ்

ஆகிய பலவிதமாக காணக்கிடைக்கின்றன.

இவற்றில் கடைசி விதத்தை எடுக்கும் தொழில்நுட்பம் இன்னும் ஆராய்ச்சியளவிலேயே உள்ளது.

மற்றவை தரை மட்டத்திலிருந்து (கடலடி மற்றும் நிலப்பகுதி) சில நூறு மீட்டர் ஆழத்திலிருந்து பல கிமீ ஆழம் வரை கிடைக்கின்றன.

கிடைக்கும் இடம், ஆழம், பாறை வகை, உள்ள இடத்தில் நிலவும் அழுத்தம், type ஆகியவற்றைப் பொறுத்து அகழ்ந்தெடுக்கும் முறைகள் மாறுபடும்.

++++++++++++++++++++++++++

Oil industry standards படி இந்தியாவில் விபத்து விகிதங்கள் மிகக் குறைவு.

+++++++++++++++++++++++++

அகழ்ந்தெடுக்க primary recovery_ அடியாழத்தில் உள்ள அழுத்தத்தினாலும், குறையடர்த்தியினாலும் எண்ணெய் மற்றும் கேஸ் தாமே மேலே வருவது;

Secondary recovery_ மேலிருந்து அடர்த்தியதிகமான நீரை அழுத்தத்துடன் செலுத்தி குறையடர்த்தி கொண்ட எண்ணெய் + கேஸ் - ஐ மேலே வர செய்து சேகரித்து கொள்வது;

tertiary recovery_ அடியாழ பாறை துகள்களுக்கிடையே உள்ள ஹைட்ரோ கார்பனை பிரிக்க கூடிய biological agents - ஐ அனுப்புவது,

fracking செய்வது போன்ற முறைகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட எண்ணை வயல்களிலிருந்து ஹைட்ரோ கார்பன்களை மேலே கொண்டு வருவது பல ஆண்டுகளாக உள்ள நடைமுறை.

நான் M.Sc. படிக்கும் காலத்திலேயே இதை பார்த்துள்ளேன். ஏதாவது இதனால் ஆபத்து என்று பயந்தால் ...25 வருஷமா உலகில் எங்கும் நடக்காத ஆபத்து தமிழகத்தில், காவிரி வடிநிலத்திலோ , நெடு வாசலில் மட்டும் நடக்கும் என்பது எனது சிற்றறிவுக்கெட்டவில்லை.

சீனாவில் அடுத்தகட்டமாக இறந்த எண்ணை கிணறுகளை ....

Industrial, Urban and burning of fossil fuel activities மூலம் வளிமண்டலத்தில் கலக்கும் கரியமிலவாயுவை பிரித்து, நீர்மமாக குளிர்வித்து தீர்ந்து போன ஹைட்ரோ கார்பன் எண்ணெய் கிணறுகளுக்குள் செலுத்தும் தொழில்நுட்பத்தை தென் சீன கடலில் கடலில் பல நூறு மீட்டர் தண்ணீரை தாண்டி தரைக்கடியில் சில கிமீ ஆழத்தில் உள்ள எண்னைய் கிணறுகளுக்குள் முயற்சி செய்து கொண்டிருக்கிற காலம் இது. கோமாவிலிருந்து எழுந்து வாங்க ஸ்வாமி!

++++++++++++++++++++

அடுத்து, விவசாய நிலம் தான் கிடைத்ததா?

++++++++++++++++++++

++++++++++++++++++++++++++

நிலத்தடி நீர் பாதிக்கப் படாதா?

++++++++++++++++++++++++++

ஹைட்ரோகார்பன் விஷ வாயுவல்லவா என்றவற்றைப் பார்க்கலாம்.

முன்னரே சொன்ன விதமாக என்ன கனிமம் எங்கு, எவ்வளவு ஆழத்தில் கிடைக்கிறதோ, அங்கே, எந்தவிதத்தில் எடுக்க முடியுமோ அப்படி தான் எடுக்க முடியும். அது மொட்டைப் பாறையோ, பாழ் நிலமோ, விவசாய நிலமோ என்பது influence செய்வதில்லை.

ஹைட்ரோ கார்பன் என்பது படிவுப் பாறைகளிலேயே கிடைக்க கூடியதென்பதாலும், வடிநிலங்களில் படிவுப் பாறைகளிலிருப்பதாலும், வடிநிலங்கள் விவசாயப் பயன்பாட்டுக்குட்படுத்தபட்டு வருவதால் ஹைட்ரோகார்பன் துரப்பண ஆய்வும், உற்பத்தியும் விவசாய நிலங்களிலும் (கவனிக்க, விவசாய நிலங்களிலும், விவசாய நிலங்களில் மட்டுமேயல்ல) செய்யப்படுவது தவிர்க்கயியலாத இயற்கையாக அமைந்த நிலவரம். இதில் நபரையோ, அரசையோ குறை சொல்லயியலாது.

அடுத்ததாக, எவ்வளவு நிலம் தேவைப்படும்?

துரப்பணபணியின் போது பல விதமான பெரிய உபகரணங்கள் பயன்படுத்தபடுவதால் குறைந்தபட்சம் ஒவ்வொரு எண்ணை கிணறு, வயலுக்கு சில ஏக்கர் நிலம் தேவைப்படலாம். பின் reservoir testing முடிந்த பின்...

++++++++++++++++++++++++++++++++++

உற்பத்தி ஆரம்பித்தால் நம்ப கார்ப்பரேஷன் மேல்நிலை குடிநீர் தொட்டி, பம்பிங் ஸ்டேஷன் அளவுக்கு இடம் தேவைப்படும்.

++++++++++++++++++++++++++++++++++

அடுத்து, நிலத்தடி நீர் மாசுபடும் என்ற ஐயம்.

மக்களின் குடிநீர், விவசாய பயன்பாட்டிற்கான நிலத்தடி நீர் நில அமைப்பு, பூமிக்கடியிலுள்ள பாறைகளின் கட்டமைப்பு ஆகியவற்றை பொறுத்து தரைமட்டத்திலிருந்து சில நூறு அடிகள் ஆழம் வரை தான் இருக்கும்.

ஆனால் பாறை துகள் இடுக்கு வகையிலான ஹைட்ரோகார்பன் வயல்கள் பல்லாயிரம் அடியாழத்தில் தான் இருக்கும்.

இரண்டுக்கும் இடையே நீர் புகா (impervious) பாறைகள் தான் இருக்கும். எனவே ஹைட்ரோ கார்பன் நிலத்தடி நீரை மாசு படுத்தும் என்பது %%%துர்லபம்%%%.

துரப்பணபணிகளுக்காகவோ, உற்பத்திக்காகவோ துளையிடும் போதே metal + சிமெண்ட் seal செய்யப்பட்ட Casing துளைக்குள் செருகப்படும், இல்லாவிட்டால் தொடர்ந்து துளையிடவும் முடியாது, அடியாழத்திலுள்ள எண்ணை + கேஸ் - ஐ மேல் கொணர்ந்து சேகரம் செய்ய முடியாது.

++++++++++++++++++++++++++++++++++

எனவே நிலத்தடி நீர் மாசுபடும் என்ற அச்சம் தேவையற்றது.

++++++++++++++++++++++++++++++++++

எல்லாவற்றுக்கும் மேலாக எந்தவொரு Mining என்றாலும் நிலமேல், நிலத்தடி, நீர், மண், போன்றவற்றை வேலை ஆரம்பிக்கு முன் ஆய்வு செய்வார்கள். பின் உற்பத்தி ஆரம்பித்தவுடன் குறிப்பிட்ட காலக்கெடுவுக்கொரு முறை மீண்டும் பரிசோதித்து Environmental Clearance பெறுவார்கள்.

++++++++++++++++++++++++++++++

தவறும் பட்சத்திலும், பாதிப்பு இருப்பதாக தெரியும் Uட்சத்திலும் mining நிறுத்தப் Uடும். ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்யும் வரையும், பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்கும் வரையும் சம்பந்தப்பட்ட நிறுவன நடவடிக்கைகளும் முடக்கப்படும்.

++++++++++++++++++++++++++++++

அடுத்து ஹைட்ரோ கார்பன் என்பது விஷவாயு என்ற ஐயம், ஹைட்ரோ கார்பன் கேஸ் மீத்தேன், ஈ.த்தேன், ப்ரொப்பேன் போன்ற கரிம மூலக்கூறுகளின் வாயு கலவை.

மனிதன் உட்பட பிராணிகள், பிராண வாயுவை தவிர வேறெதையும் சுவாசிக்கயியலாது. வீட்டில் கேஸ் சிலிண்டர் லீக் ஆகும் ஆபத்தை விட ஹைட்ரோ கார்பன் வயல்களில் உள்ள ஆபத்தின் Probability மிக மிக குறைவு

Prof. Mu Ramkumar with Prof.Wolfgang Ketterle, Nobel Prize Winner, in the Lawns of Official Residence of "German President", Berlin. We, among many others were invited by the German Presidency for a Dinner in honor of we being Humboldtians

விஜயராகவன் கிருஷ்ணன்